நான் தவிக்கிறேனடி நீ சிரிக்கிறாயடி

Sunday, 22 December 2013

என் துாக்கத்தை எறிந்து விட்டு 
தொட்டிலில் துாங்குகிறாயா?- நீ 
என் துாக்கத்தை எறிய முடிந்த -உனக்கு 
உன் ஞாபங்களையும் எறிந்து விட்டு செல்
இல்லையேல் எங்கேயாவது என்னை எரியச்செய்து விட்டு செல்

என்னிடம் உள்ள எல்லா வழிகளும்
உன் வருகைக்காவும் என் தொலைபேசியும் உன்
அழைப்பிற்காகவும் காத்திருக்கின்றன.

இன்று நேற்று ஏன் நாளையும் கூட
உன் வருகைக்காவே இறங்கி கிடக்கிறது.

எனக்குள்ளும் காதல் என்பதைவிட
எனக்குள்ளே நீதான் என்பதே நிகரான சரியாகும்.

பெண்களின் மனதை புரிந்து கொள்ள முடியாது
என்பதை விட
அவர்கள் ஒருபோதும்
ஆண்களை புரிந்து கொள்வதில்லை
என்பதாக அது மாற வேண்டும்.

Read more ...

அக்கரையில் நீ ஏன்னதான் செய்கிறாயோ

Sunday, 22 December 2013
                                                      நீ என்னுடன் பேசாவிட்டாலும்
உள் மனது உன் நினைவுகளுடன்
பேசிக்கொண்டேதான் இருக்கிறது.

தருணத்தில் காரணமில்லாமல்
அழவைப்பதில் உனக்கு அலாதிப்பிரியம்.
ஏன் என்னை இற்றைக்கும் அழவைக்கிறாய்.

நீ பிரிப்பட்ட எல்லாவற்றுக்கும்
நான் தலையசைத்தவன் என்பதற்காகவா
நீ பிரிந்து செல்லும் போதிலும் தலையசைப்பேன்
என்று எண்னிக்கொண்டாயோ?

Read more ...